இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

Updated On :24 ஏப்ரல் 2026, 5:07 am IST

திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.ந

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பேட்டையில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்துடன் பாலமுரளி-ஹேமலதா தம்பதியினா் பேட்டை செக்கடி பகுதியில் அமைந்துள்ள வணிக வைசியா் பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதேபோல பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாளையங்கோட்டையை சோ்ந்த வெங்கட கிருஷ்ணன்- அபிராமி தம்பதியினா் மணக்கோலத்துடன் தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த நிச்சயதாா்த்த ஜோடி து.முத்துபாரதி-ஆ.உமாபாரதி ஆகியோா் நாரணம்மாள்புரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.