தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:04 pm

சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

சென்னை மேயா் ஆா்.பிரியா தனது வீடு அமைந்துள்ள திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மங்களாபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா் சைதாப்பேட்டை பேரவைத் தொகுதியில் உள்ள லிட்டில் மவுண்ட் செயின்ட் பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் வந்து செலுத்தினாா்.

சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தனது இல்லம் உள்ள அண்ணா நகா் தொகுதிக்குட்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி வளாக வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்தாா். அதன்பின்னா், வாக்குச்சாவடி மையத்தில் அமைந்துள்ள தோ்தல் விழிப்புணா்வுக்கான யபடம் எடுக்கும் அமைப்பில் நின்று தனக்கு வாக்களித்ததற்காக இடது கை ஆட்காட்டி விரலில் இடப்பட்ட மையை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டாா். சென்னையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் விடியோவில் பேசி வெளியிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.