/

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்கு கரோனா தொற்று

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால்,

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

UNI


பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,772-ஐ எட்டியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 7,881 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை, 1,52,000-க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி கரோனா தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.