/

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

News image
விபத்துக்குள்ளான பேருந்து. - IANS
Updated On :23 பிப்ரவரி 2026, 3:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.

அண்டை நாடான நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்குச் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மத்திய மாவட்டமான தாடிங்கில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்தில் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் 44 பேர் பயணித்ததாக மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பேருந்து விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நேபாளத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

2024–25 நிதியாண்டில், நாட்டில் 7,669 சாலை விபத்துகளும் 190 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

summary

At least 17 people died after a bus travelling from western Pokhara to the capital Kathmandu plunged into the Trishuli River in the central district of Dhading early Monday, a senior official at the District Administration Office, Dhading, said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.