தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்தியத் திரைப்படத்தின்...

ஒலிம்பிக்ஸ் விளம்பரத்தில் 'கீதா கோவிந்தம்' பாடல் பல்லவி: வைரலாகும் காணொளி

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 pm

அதிகாரபூர்வ ஒலிம்பிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரிஸில் ஜூலையில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்தான விளம்பரக் காணொளியில் "கீதா கோவிந்தம்' தெலுங்கு திரைப்படத்தின் "இன்கெம் இன்கெம்.. இன்கெம் காவாலா' பாடலின் பல்லவியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையறிந்த படத்தின் நாயகனாக நடித்திருந்த விஜய் தேவரகொண்டா அந்தக் காணொளியை பகிர்ந்துள்ளார். பதினெந்து விநாடிகள் ஓடும் அந்தக் காணொளி வைரல் ஆகியுள்ளது.

காணொளியில் ஈபிள் கோபுரம் ஒலிம்பிக் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டு, "கீதா கோவிந்தம்" படத்தின் "இன்கெம் இன்கெம்" பல்லவியுடன், டிரேக்கின் "ஹாட்லைன் பிளிங்" இசையும் பின்னணியில் ஒலிக்கிறது.

ஒலிம்பிக்ஸ் விளம்பரக் காணொளியில் இந்தியப்படத்தின் பாடலின் பல்லவி இடம் பிடித்திருப்பது பாடலின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.