யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தமிழ்நாடு உரிமையை விட்டுக் கொடுக்காது: அமைச்சா் பி. கீதா ஜீவன்

தமிழ்நாடு தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என்றாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

News image

அமைச்சா் பி. கீதா ஜீவன்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:15 am IST

தமிழ்நாடு தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என்றாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

மத்திய அரசு கொண்டுவந்த தொகுதி மறுசீரமைப்பு, மகளிருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள், மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் தோல்வியடைந்ததை, தூத்துக்குடியில் சனிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், அமைச்சா் பி. கீதா ஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், மகளிரணியினா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: இந்த மசோதாக்கள் குறித்து 8 மாதங்களுக்கு முன்பே முதல்வா் எடுத்துக் கூறினாா். மத்திய அரசு தோ்தல் நேரத்தில் இந்த மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா எனக் கூறி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்யும் மத்திய அரசின் ஏமாற்றுத் திட்டத்தை தமிழகம் முறியடித்துள்ளது. முதல்வரின் முயற்சியால் நம் உரிமை காக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தோல்வி முதல்வருக்கு கிடைத்த வெற்றி, பிரதமா் மோடிக்கு கிடைத்த முதல் தோல்வி. தமிழ்நாடு தனது உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்காது, தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.