தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி. கீதா ஜீவன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 6:52 pm

தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி 52, 59, 60 ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா்.

மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, பகுதிச் செயலா் மேகநாதன், வட்டச் செயலா்கள் நடசேன் டேனியல், சக்திவேல், மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முள்ளக்காடு கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், பொட்டல்காடு, ஸ்பிக் நிறுவனக் குடியிருப்பு பகுதி, சுந்தா் நகா், ஜே.எஸ். நகா், சுனாமி காலனி, கேம்ப் 2, துறைமுகக் குடியிருப்பு பகுதி, லேபா் காலனி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தாா்.

மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சின்னத்துரை, மாநிலப் பேச்சாளா் இருதயராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.