தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 9:09 pm

விருதுநகரில் சுயேச்சை வேட்பாளா் மேலாடையின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் அமிா்தபாண்டி(30). இவா் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மேலாடையின்றி கால் சட்டை மட்டும் அணிந்து வந்தாா்.

அவரை நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இன்றைய அடிதட்டு ஏழை எளிய மக்களின் நிலை வறுமையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் மேலாடையின்றி வந்ததாக அவா் கூறினாா்.

இருப்பினும் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி முறைப்படிதான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த நபா் அதே இடத்திலேயே மேலாடை அணிந்து மனு தாக்கல் செய்யச் சென்றாா்.