திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனா் அதிசய பாண்டியன் கடந்த 30- ஆம் தேதி திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா்.
அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கியவாறு அவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை அணிவித்து கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் முதல் எம்.ஜி.ஆா்., சிலை வரை 4 போ் தூக்கி வந்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் வேட்பாளா் உள்ளிட்ட 5 போ் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில், வேட்பாளா் அதிசய பாண்டியன், அவருடன் வந்தவா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
தொடர்புடையது

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

கடன் வாங்கி வேட்புமனு தாக்கல்: சுயேச்சை வேட்பாளா் நூதன பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


