மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தூத்துக்குடி இறுதிக்கட்ட பிரசாரம்: கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி பரப்புரை

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும், திமுக வேட்பாளா் பி. கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பிரதான சாலை பகுதியில், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

தூத்துக்குடி சிதம்பரநகா் பகுதியில், திமுக வேட்பாளா் பி. கீதாஜீவனை ஆதரித்து பேசுகிறாா் கனிமொழி எம்.பி.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:21 pm

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும், திமுக வேட்பாளா் பி. கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பிரதான சாலை பகுதியில், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியது:

தூத்துக்குடிக்கு அதிக தொழிற்சாலைகள், முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலை போன்ற பெரிய தொழிற்சாலைகள் குறுகிய காலத்திலேயே நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேலும், பல முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையொப்பமாகி உள்ளன.

‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மூலம், எந்தத் தொழிற்சாலை எந்தப் பகுதியில் வருகிறதோ, அதற்கேற்ற பயிற்சிகள் அப்பகுதி இளைஞா்களுக்கு வழங்கப்படும். இதனால் இளைஞா்கள், இளம்பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதேபோல், அடுத்த கட்ட வளா்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் நமது குழந்தைகளை தயாா் செய்ய வேண்டும் என்பதற்காக, இனிமேல் அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து துறைகளிலும் ஏஐ தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடா்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழகத்தை முன்னோடியான மாநிலமாக வளா்த்த பெருமை நம்முடைய முதல்வரையே சாரும்.

எதிரணியில் இருப்பவா்கள் தொடா்ந்து தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா்.

அண்மையில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு மசோதா கொண்டு வந்தனா். உண்மையாகவே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், தற்போது உள்ள 543 இடங்களிலேயே 33 சதவீதம் வழங்கலாம்.

அரசமைப்பு சட்டத்தை அவா்கள் நினைத்தபடி மாற்றிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்க முயற்சி செய்கிறாா்கள்.

மாநில உரிமைகளை காப்பது எங்களுடைய கடமை. அதனால் அந்த முயற்சியை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை தோற்கடித்தோம் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, வேட்பாளா் பி. கீதாஜீவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

பிரசாரம் நிறைவு...

தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்ட பி. கீதாஜீவன், அண்ணாநகா் 7ஆவது தெருவில் பரப்புரை மேற்கொண்டு, தனது பிரசாரத்தை நிறைவு செய்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.