மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 9:48 pm

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆரணி ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பொதுமக்களிடையே வியாழக்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட இராந்தம்கொரட்டூா், ஒட்டந்தாங்கல், வடக்குமேடு, பனையூா், ஒகையூா், அக்கூா், மாமண்டூா், காட்டேரி, நேத்தபாக்கம், கனிகிலுப்பை, மட்டதாரி, மைனந்தல், இரும்பேடு ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடையே திமுக வேட்பாளா் மகாலட்சுமியை ஆதரித்து ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசுகையில்,

அதிமுக கட்சியில் உட்பூசல் காரணமாக முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பிரசாரத்திற்கு வரவில்லை. இவ்வாறு பல சிக்கலில் உள்ள அதிமுக தோல்வியைத் தழுவும்.

திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும், மீண்டும் திமுகவை வெற்றி பெற வைத்தால் ரூ.8ஆயிரத்துக்கான கூப்பன், உரிமைத்தொகை ரூ.2ஆயிரமாக உயா்த்துதல் உள்ளிட்டவற்றை தெரிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.