இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இடிதாங்கியான செம்புக் கலசம்!

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே என்ன இருக்கும் என்பதில், விஞ்ஞானமும் இருக்கிறது.  இடிதாங்கும் தன்மை இந்தக் கலசத்துக்கு இருக்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:17 am

முக்கிமலை நஞ்சன்

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே என்ன இருக்கும் என்பதில், விஞ்ஞானமும் இருக்கிறது.  இடிதாங்கும் தன்மை இந்தக் கலசத்துக்கு இருக்கிறது.

இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன.  வானில் இருந்து மழை பெய்யும்போது, இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோ முதலில் உயர்ந்தக் கட்டடங்களைத் தான் தாக்கும். அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றுக்கு இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் உச்சியில் செம்புக் கலசம் பொருத்தப்பட்டன.

காந்தக் கம்பிகள் விஞ்ஞானத்தால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கோயில்களில் செம்புக் கலசங்கள் பொருத்தப்பட்டன.  இவற்றில் வரகு தானியம் கொட்டப்பட்டிருக்கும். இந்தத் தானியம் இருக்கும் வரையில்  இடியை எதிர்க்கும் காந்த அதிர்வு கிடைக்கும். மொத்தத்தில், இது இடிதாங்கி. வரகு தானியத்துக்கு இடியை எதிர்க்கும்- தடுக்கும் ஆற்றல் 12 ஆண்டுகள் வரை உண்டு. எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.