தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முப்பாலும், இப்பாலும்

பல ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியில் இலக்கிய மன்ற மாநாடு தமிழரசு கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2022, 12:30 am

பல ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியில் இலக்கிய மன்ற மாநாடு தமிழரசு கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

பிரபுலிங்க லீலை (வீர சைவ நூல்) யிலிருந்து சில காட்சிகளை வாரியார் விளக்கிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அன்பர் ஒருவர் வாரியர் சுவாமிக்கு, ஒரு குவளையிலிருந்து ஏதோ கொண்டு வந்து கொடுத்தார். 

வாரியார் சுவாமிகள் அதைக் கவனித்தார். உடனே அவர், "இது காப்பி. ஆனால் நான் சொல்வதோ அசல்'  என்றார். 

அவருக்கு அருகே அமர்ந்திருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி "இது காப்பி அல்ல. பால்' என்று விளக்கினார். உடனே வாரியார் "நான் முப்பாலும் கடந்து அப்பால் இருக்கிறேன். இதோ இப்பாலும் வந்து விட்டது' என்று கூறி முடித்தார். 

இதை கேட்ட கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.