திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதல் கட்டணம் 

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டருக்கு படித்து முடித்து பட்டம் பெற்று வீடு வந்தார். தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் வழங்க கோரினார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:17 am

முக்கிமலை நஞ்சன்

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டருக்கு படித்து முடித்து பட்டம் பெற்று வீடு வந்தார். தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் வழங்க கோரினார்.

வாழ்த்துகள் சொன்ன அண்ணா, "தனக்கு ஜுரம் இருப்பதாகவும் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

தந்தை சொன்னபடி டாக்டர் மகனும் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்தார். உடனே அண்ணா தன் சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

"இது உனக்கு ஆசீர்வாதமாக தரப்படுவது மட்டுமல்ல ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதற்கான உன் முதல் நோயாளியின் பீஸ் கட்டணம் இது' என்றார் அண்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.