தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோனியின் பொழுதுபோக்கு!

கரோனா  இரண்டாம்  அலையின் பொது முடக்கம்  காரணமாக  அனைத்து  நிகழ்வுகளும் முடக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன?

News image
Updated On :27 ஜூன் 2021, 12:30 am


கரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கம் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் முடக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் முடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்குச் சென்றுவிட்டார்.

தோனிக்கு மகள் ஸிவா மீது அளவில்லா பிரியம். பல வித பொம்மைகள் வாங்கிக் கொடுத்ததுடன் மகள் கேட்டதன் பேரில் வெண்ணிற குதிரைக் குட்டி ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட முடியாத இந்த காலகட்டத்தில் தோனி தன் பொழுதைக் கழிக்க கை கொடுத்துவருவது இந்தக் குதிரை தான். குதிரையைப் பராமரிப்பதில் தோனியின் பொழுது கழிகிறது. சில வாரங்களுக்கு முன் குதிரையுடன் விளையாடும் படங்கள் சமூக தளங்களில் வைரல் ஆனது.

மேலும் குதிரையை தனது பங்களாவின் பரந்த புல்வெளியில் ஓடவிட்டு, குதிரையின் ஓட்டத்திற்கு இணையாக ஓடி தோனி ஒட்டப்பயிற்சி செய்ய, தோனியின் மனைவி சாக்ஷி அதை காணொளியாகப் படம் பிடித்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றம் செய்ய.... அந்த காணொளி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.