தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உணவு தட்டையும் சாப்பிடலாம்...

கரோனா காலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.

News image
Updated On :20 ஜூன் 2021, 12:30 am


கரோனா காலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கோதுமை உமியால் அல்லது தவிட்டினால் செய்யப்பட்ட உணவுத் தட்டுகள், ஸ்பூன்கள், கிண்ணங்கள், கத்திகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

சாப்பிட்டு முடிந்ததும் உணவுத் தட்டையும், ஸ்பூன்களை, கிண்ணங்களையும் சாப்பிட்டுவிடலாம். அப்படிச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் ஆடு. மாடு போன்ற பிராணிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். மீன் வளர்த்தால் மீன்களுக்கு உணவாகப் போடலாம். அதுவும் இயலாத பட்சத்தில் பயன்படுத்திய தட்டு, கிண்ணம், ஸ்பூன்களை கழிவுகளில் சேர்த்துவிடலாம். அவை சில நாட்களில் மக்கி மண்ணுக்கு உரமாகிவிடும்.

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விநயகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் கோதுமை உமியால் இந்தப் பொருள்களை உருவாக்கியுள்ளார்.

""அடுத்த ஆண்டிலிருந்து ஒரு முறை பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இந்தியா முழுவதும் தடை வரும் என்று சொல்லப்படுகிறது.

அப்படி தடை வரும் பொழுது, ஒரு முறை பயன்படுத்தும் இந்த சுற்றுபுறச் சூழலுடன் இணைந்து நிற்கும் கோதுமை உமி தட்டுகள், கிண்ணங்கள், ஸ்பூன்களுக்கு வரவேற்பு கூடும். இந்தவகை தட்டுகள், இதர பொருள்கள், தானியங்கி இயந்திரங்களால் செய்யப்படுபவை. கரோனா காலத்தில் உணவை வாங்கி வர.. அல்லது விநியோகம் செய்ய, உணவைப் பார்சலாகக் கொடுக்க சிறு பெட்டிகளையும் உருவாக்கியிருக்கிறேன்.

அவைகளில் உணவுகளை வைத்து வழங்கலாம். பிளாஸ்டிக் பெட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கவே இந்த ஏற்பாடு. கோதுமை உமியால் செய்யப்படும் பொருள்கள் மைனஸ் 10 டிகிரி குளிரையும், 140 டிகிரி வெப்பத்தையும் தாங்கும். அதனால் மின்னடுப்புகளில் உணவுப் பொருள்களை சூடுபடுத்தவும் உமியால் செய்யப்படும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் பால
கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.