அதனால் குழந்தைகளுக்கு உரை மாத்திரை கொடுப்பதை வழக்கமாக்குங்கள். இது 10 வகை மூலிகைகளை உள்ளடக்கியது. குழந்தை பிறந்த 15 நாள் முதல் 3 மாதம் வரை இந்த உரை மாத்திரைகளை உரசி தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம். 1 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை தேனில் கலந்து கொடுக்கலாம். இது குழந்தைகளின் உடலில் உள்ள செரிமான பிரச்னை, சளி, மாந்தம் என பல பிரச்னைகளையும் சரி செய்யும். சிறிய அளவு கொண்ட இந்த மாத்திரை உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது.உரை மாத்திரையின் விவரம்: வசம்பு,அதிமதுரம்,ஜாதிக்காய்,கடுக்காய்,பூண்டு,பெருங்காயம்,இஞ்சி,சுக்கு,திப்பிலி, அக்கரகாரம்.சிறந்த நோய் எதிர்ப்பு மருந்து உரை மாத்திரை என்பதில் மாற்று கருத்து இல்லை.