கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் குறித்து...

News image
இறுதிப் போட்டியில் சதமடித்த சுபம் பண்டிர். - படம்: பிசிசிஐ டொமஸ்டிக்.
Updated On :24 பிப்ரவரி 2026, 1:02 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணி 284 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியில் சுபம் பண்டிர் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 284/2 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றுமொரு தொடக்க வீரர் யாவேர் ஹாசனும் நம்.3-ல் களமிறங்கிய சுபம் பண்டிரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

யாவேர் ஹாசன் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா காயம் காரணமாக 9 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய அதிரடி வீரர் அப்துல் சமத் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

நம்.3ல் களமிறங்கிய சுபம் பண்டிர் 221 பந்துகள் விளையாடி 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அப்துல் சமத்துடன் இருக்கிறார்.

67 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் குவித்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

கர்நாடக அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.