மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மன உறுதியும் விடாமுயற்சியும்... ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!

முதல்முறையாக ரஞ்சி கோப்பை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா கூறியிருப்பதாவது...

News image

ரஞ்சி கோப்பையுடன் ஜம்மு காஷ்மீர் அணியினர். - பிடிஐ

Updated On :28 பிப்ரவரி 2026, 10:06 am

முதல்முறையாக ரஞ்சி கோப்பை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஐசிசி தலைவரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில், “மன உறுதியும் விடாமுயற்சியும் கொண் ஜம்மு காஷ்மீர் அணி மறக்க முடியாத அளவுக்கு வரலாறு படைத்துள்ளது” எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய கர்நாடகம் அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்ததாக, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 113 ஓவர்களில் 342/4 ரன்கள் எடுத்து ஐந்தாம் நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதனால், ஆட்டம் சமனில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த ஜம்மு காஷ்மீர் அணி கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

பள்ளிக் குழந்தைகளின் ஆதரவு.

பள்ளிக் குழந்தைகளின் ஆதரவு. - படம்: பிடிஐ

ஜம்முவில் பள்ளிக் குழந்தைகள் இந்த அணிக்கு ஆதரவாக தேசியக் கொடியுடன் கோஷங்கள் இட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:

மன உறுதி, விடாமுயற்சியைக் காண்பிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள ஜம்மு காஷ்மீர் அணி வரலாறு படைத்ததுக்கு வாழ்த்துகள்.

ஜம்மு காஷ்மீர் வீரர்கள் தாங்கள் பெறும் அனைத்து விதமான புகழ்ச்சிக்கும் தகுதியானர்கள். குறிப்பாக, இந்த சாதனையை நிகழ்த்த உதவிய ஜம்மு காஷ்மீர் அணியின் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் அவர்களுக்கும் இந்தப் பாராட்டுகள் செல்ல வேண்டும்.

இந்த வெற்றி ஜம்மு காஷ்மீரில் இளம் தலைமுறைகள் இதயத்தில் நம்பிக்கையைக் கொடுக்கும். இதனால், அந்த மக்களில் யாரோ ஒருவர் அடுத்ததாக பேட்டையோ பந்தினையோ எடுப்பார்கள்.

இந்த மாதிரியான தன்னம்பிக்கை கதைகள் உலகத்தில் எங்கும் கிடைக்குமளவுக்கு நமது விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. இதற்கு நல்ல மரியாதை கிடைக்குமென நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.