தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வருத்தத்திற்கான காரணம்!

ஒருமுறை ஒரு விவசாயி தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டார்.  அவரது போதாத காலம்!.... அந்த வருடம் விளைச்சல் நன்றாக இருந்தபோதும் பழங்களில் பூச்சி விழுந்து பெரும்பகுதி தக்காளிப் பழங்கள் அழுகி நாசமாகிவிட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2021, 12:30 am


ஒருமுறை ஒரு விவசாயி தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டார்.  அவரது போதாத காலம்!.... அந்த வருடம் விளைச்சல் நன்றாக இருந்தபோதும் பழங்களில் பூச்சி விழுந்து பெரும்பகுதி தக்காளிப் பழங்கள் அழுகி நாசமாகிவிட்டன.

விவசாயி நொந்து போனார். அதே ஊரில் இருந்த துறவியிடம் போய் தனது வருத்தத்தைச் சொன்னார். 

அந்தத் துறவி விவசாயியிடம், ""கவலைப்படாதே!.... அடுத்த ஆண்டு பலன் நன்றாக இருக்கும்.... ''என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

விவசாயி அடுத்த ஆண்டு தக்காளி பயிரிட்டார். விளைச்சலும் அமோகமாக இருந்தது. பழங்களும் நன்றாக இருந்தன. பழங்களை நல்ல விலைக்கு விற்றார். ஆனாலும் அவருக்கு வருத்தமாக இருந்தது. துறவியைப் போய்ப் பார்த்தார். 

அவரது வருத்தத்தை அறிந்துகொண்ட துறவி, ""இப்போது உனக்கு என்னப்பா வருத்தம்......? அதான் விளைச்சல் நன்றாக இருந்ததே!'' என்றார்.

 அதற்கு அந்த விவசாயி, ""ஐயா, கடந்த ஆண்டு நிறைய அழுகல் தக்காளிப் பழங்கள் இருந்தன. அவற்றை என் கால்நடைகளுக்கு வயிறாரப் போட்டு வந்தேன். இப்போது அவைகளுக்குப் போட என்னிடம் ஒரு அழுகின பழங்கள்கூட இல்லை! .... அதனால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது! ''

""உன் வருத்தத்திற்கு முடிவே இல்லை!.... '' என்று கூறிவிட்டு நடந்தார் துறவி.

நீதி : எது நடந்தாலும் அதில் குறை மட்டும் பார்க்கிறவர்கள் சந்தோஷத்தை அடையவே முடியாது.

("நித்தம் ஒரு நீதிக்கதை' நூலிலிருந்து ) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.