தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பாராட்டுப் பாமாலை!  36: லிடியனின்  உலக சாதனை!

சென்னை நகரின் சீர்மிகு இடமாம்சாலி கிராமம் பகுதியில் வாழும் அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்

News image
Updated On :30 மார்ச் 2019, 4:30 am


சென்னை நகரின் சீர்மிகு இடமாம்
சாலி கிராமம் பகுதியில் வாழும் 
அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்
அன்பு மகனாம் ஆருயிர் "லிடியன்'

என்னே திறமை என்னே திறமை
என்றே உலகம் வியந்து போற்ற 
சின்னஞ்சிறிய பன்னிரு வயதில் 
சாதனை படைத்தான் கீர்த்தி பெற்றான்

கடந்த வாரம் அமெரிக் காவில் 
கலையில் சிறந்த கலைஞர்க் கிடையே 
நடந்து முடிந்த "பியானோ' போட்டியில் 
நர்த்தனம் ஆடின லிடியன் விரல்கள்!

இடர்கள் தாண்டி போட்டி போட்ட 
இருபத் தெட்டு நபர்களை வென்று 
அடடா வென்றே புகழும் வண்ணம் 
அகிலம் போற்ற வாகை சூடினான்

இமிழ்கடல் சூழ்ந்த இந்திய நாட்டின் 
இணையிலா கலைஞன் என்ற சிறப்புடன் 
அமிழ்தினும் இனிய நற்றமிழ்க் கலைஞன் 
அருந்தமிழ்ப் புதல்வன் கூடுதல் பெருமை

நிமிடம் ஒன்றில் அதிக "பீட்' களைப் 
பியானோ கருவியில் இசைத்துக் காட்டித் 
தமிழர் மாண்பை உலகில் உயர்த்திய 
தமிழ்த் தும்பி வாழ்க வாழ்கவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.