தேன் குழல், சீடைக்கான மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால், எத்தனை நாள்களானாலும் நமத்துப் போகாது.
சுக்கு, வெல்லம் கலந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் சரியாகும். ஜீரணம் சுலபமாகும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்றவை ஏற்படும்.
பொடியாய் நறுக்கிய நெல்லிக்காயை கொத்துமல்லி, பச்சை மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர், தாளித்தால் நெல்லிக்காய்ச் சட்னி தயார். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, கீல் வாதம் குணமாகிவிடும்.
வெந்நீரில் உப்பு போட்டு அதில் கால்களை வைத்தால் கை, கால் வலி, அசதி நீங்கிவிடும்.
ஒரு பங்கு கடலை மாவுடன் இரு பங்கு பயத்தம் மாவு அளவில் கலந்து மைசூர் பாகு செய்தால் லேசாகவும், சுவையாகவும் இருக்கும்.
அசோக்ராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








