டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாம்பார் வடாம்

சாம்பார் வடாம் செய்வது எப்படி?

News image
சாம்பார் வடாம்
Updated On :23 மே 2025, 7:56 am

ஆர். ஜெயலட்சுமி

சாம்பார் வடாம்

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு, வெள்ளைக் கடலை- தலா 100 கிராம்

சாம்பார் வெங்காயம்- 200 கிராம்

காய்ந்த மிளகாய்- 10

கொத்தமல்லி இலை- 1 கட்டு

உப்பு- தேவையான அளவு

செய்முறை: முதல்நாள் வெள்ளைக் கடலையை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் கடலையின் தோலை அகற்றி, துவரம் பருப்புடன் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். மிளகாய், உப்பு இரண்டையும் வெண்ணெய்யாக அரைத்தவுடன் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை மொட்டை மாடி தரையில் விரித்து துணியில் மீது வடை மாதிரி தட்டி, வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுக்க வேண்டும். தேவையானபோது, எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, சாம்பாரில் சுவை மேலும் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.