தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாழைத் தண்டு காரப் பொரியல்

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும்.

News image
Updated On :16 டிசம்பர் 2023, 2:46 pm

தேவையானவை:

வாழைத் தண்டு- 1
மோர்- 100 கிராம்
மஞ்சள் பொடி- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
மிளகாய்த் தூள்-2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 ஆர்க்கு

செய்முறை:

வாழைத்தண்டை மோரில் பத்து நிமிடம் போட்டு வைக்கவும். முதலில் வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக அரிந்தவுடன் மோரில் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து மோரை வடிகட்டி, தண்டை மட்டும் எடுக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, வாழைத் தண்டைப் போட்டு வதக்கி,  ஐந்து நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.