மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குக்கரில்  பிரியாணி  செய்யும்போது

குக்கரில்  பிரியாணி  செய்யும்போது  மூடியை மூடுவதற்கு  முன்பாக  சிறிது  எண்ணெய்  விட்டுக்கிளறி  மூடினால்  பிரியாணி  உதிரியாக  வரும் குழைந்து போகாது.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 4:22 pm


குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக்கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும் குழைந்து போகாது.

அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றுடன் வெங்காயத் துண்டுகளையும் சேர்த்து அரைத்து விட்டால் அடை மெலிதாக வருவதுடன் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

சுட்டு வைத்த அப்பளம் நமத்துப் போய் விட்டதா, அந்த அப்பளங்களை நான்காக வெட்டி, எண்ணெய்யில் மீண்டும் பொரித்து விடுங்கள். ருசியாக இருக்கும்.

மோர் மிளகாய் வறுக்க, போகிறீர்களா? தோசை சுட்டு முடித்தப்பின் கல் சூடாக இருக்கும்போதே ஏழெட்டு மோர் மிளகாய்களைப் போட்டு சில சொட்டு எண்ணெய்விட்டு வறுத்தால் அதிகம் கருகாமலும் மொறு மொறுவென்றும் வறுபடும்.

அவலை சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொண்டு தோசை வார்க்கும்போது கலந்து ஊற்றினால் சுவையான ஸ்பான்ச் தோசை தயார்.

தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ரசத்தின் ருசி பிரமாதமாக இருக்கும்.,

அவியல் செய்யும்போது தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவற்றோடு சிறிது அரிசியை நீரில் ஊற வைத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டால் அவியல் வெள்ளை வெளேரென்றும் கெட்டியாகவும் இருக்கும்.

கலவை சாதம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். சாதம் பொலபொலவென்று உதிரியாக சுவையாக இருக்கும்.

தோசைக்கு அரைக்கும்போது ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் ஊற வைத்து அரைத்தால் தோசை மிகவும் டேஸ்டியாக இருக்கும்.

தட்டை செய்யும்போது மைதாமாவு, அரிசி மாவுக்குப் பதிலாக கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்யலாம். தட்டை அதிக ருசியுடன் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.