திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பஜ்ஜி சுவையாக இருக்க..

துவரம் பருப்பை  வேக வைக்கும்போது  ஒரு தேக்கரண்டி  வெந்தயத்தைச் சேர்த்து  வேக வைத்தால் பருப்பு  சீக்கிரம்  வெந்துவிடும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 6:01 pm IST

.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் போன்றவற்றில் பஜ்ஜி செய்யப் போகிறீர்களா? காய்களை வில்லைகளாக நறுக்கி ஒருவில்லையின் மேல் ஏதாவது ஊறுகாய் விழுதை தடவிவிட்டு அதன்மேல் இன்னொரு வில்லையை வைத்து மூடி பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

வடை, பஜ்ஜி, போண்டா, தோசை, அடை போன்றவை மொறு மொறுப்பாக வர வேண்டுமா? ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து அதை இரண்டு தேக்கரண்டி எடுத்து மாவுடன் கலந்து செய்தால் மொறுமொறுப்பாக வரும்.

மெதுவடைக்கு அரைத்த மாவின் பதம் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அரைத்த மாவைச் சிறிதளவு உருட்டிப் போட்டால் மேலே மிதந்து வரும். இதுவே சரியான பதம்.

குலோப்ஜாமூனுக்கு பாகு செய்து இறக்கும்போது, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து இறக்கினால் பாகு சீக்கிரம் கெட்டுப் போகாது. கூடுதல் சுவையாக இருக்கும்.

சேமியா உப்புமாவின் சுவையைக் கூட்ட உப்பு சேர்த்து இறக்குவதற்கு முன்னால் அரை மூடி எலுமிச்சைச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம்.

சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு புளித் தண்ணீர் ஊற்றி வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.