திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமையல் டிப்ஸ்...

இட்லி தோசைக்கு  உளுத்தம் பருப்பு அரைக்கும்போது  கொஞ்சம்  பெருங்காயப் பொடியைச் சேர்த்து  அரைத்தால்  கமகமவென்று  மணமாக இருக்கும்.

News image
Updated On :9 ஜூன் 2021, 6:00 am IST

இட்லி தோசைக்கு  உளுத்தம் பருப்பு அரைக்கும்போது  கொஞ்சம்  பெருங்காயப் பொடியைச் சேர்த்து  அரைத்தால்  கமகமவென்று  மணமாக இருக்கும்.

✦கறிவேப்பிலைத் துவையலுக்கு  உளுத்தம் பருப்புக்கு  பதில்  வேர்க்கடலையை  வறுத்து  அரையுங்கள். துவையல்  மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

✦சாம்பார்,  வற்றல் குழம்பு  ஆகியவற்றில்  காரம்  அதிகமாகிவிட்டால்  நல்லெண்ணெய்யை  ஊற்றி  கொஞ்சம்  கொதிக்க
விடுங்கள்,  காரம் குறைந்துவிடும்.

✦ஆவிவரும் வரை சூடாக்கி பின்னர்  குளிரவிட்ட எண்ணெய்யில்  ஊறுகாய்  போட்டால்  எளிதில்  பூஞ்சணம் பிடிக்காது.

✦வாழைக்காயைப்  ப்ரிட்ஜில்  வைக்கும்போது  அப்படியே  வைக்காமல்  இரண்டாக  நறுக்கி  வைத்தால் கறுக்காமல் அப்படியே  புதிது போல் இருக்கும்.

✦மசால்வடை  செய்யும்போது மாவு நீர்த்துப் போய்விட்டால்  இரண்டு  பிரெட்  துண்டுகளை  மிக்சியில்  பொடித்து,  மாவுடன் சேர்த்து  வடைதட்டினால்  வடை ருசி பிரமாதமாக இருக்கும்.

✦பூரிக்கிழங்கு  செய்யும்போது  அதில்  பொட்டுக்கடலையோடு  சோம்பு  சேர்த்து  அரைத்துக் கலந்தால்  அதன்  சுவையே  அலாதிதான்.

✦ரவா தோசை  மாவில்  ஒரு தேக்கரண்டி  நல்லெண்ணெய் சேர்த்தால்  தோசை  மொறு மொறுவென்று  சுவையாக இருக்கும்.

✦புதினா சட்னி  செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  தேங்காய்த் துருவலும், சிறிதளவு  வேர்க்கடலையும்  சேர்த்து  அரைத்தால்  சட்னி  சுவையாக இருக்கும்.

✦இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் கூடுதல் சுவையாக 
இருக்கும்.

✦உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

✦வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் பாத்திரத்தில் வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

✦சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

✦உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். 

✦ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.