திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டிப்ஸ்.. டிப்ஸ்..

கடலைப் பருப்பை லேசாக வறுத்து, பிறகு வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வெல்லம், ஏலக்காய்த் தூள், திராட்சை, முந்திரி போட்டு பாயசம் செய்யலாம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

முக்கிமலை நஞ்சன்


கடலைப் பருப்பை லேசாக வறுத்து, பிறகு வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வெல்லம், ஏலக்காய்த் தூள், திராட்சை, முந்திரி போட்டு பாயசம் செய்யலாம்.

 தோசை மாவில் சிறிதளவு தேங்காய்ப் பாலைக் கலந்து தோசை வார்த்தால் மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.

 எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, ஊறுகாய்த் துண்டுகளுடன் ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அத்துடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடுதலாகும்.

 ரசம் வைத்தவுடன் அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை போட்டுக் கலந்து வையுங்கள். ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.

 கேசரி செய்யும்போது தண்ணீரைக் குறைவாகச் சேர்த்து அந்த அளவுக்குப் பாலை அதிமாகச் சேர்த்துச் செய்தால் கேசரி நன்கு மணமாகவும், புதுவிதச் சுவையாகவும் இருக்கும்.

 ரவை உப்புமா தயார் செய்யும்போது, அதற்காக வைக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவோ அதில் பாதியளவு தண்ணீரும் பாதியளவு பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்தால் ருசி கூடுதலாகக் காணப்படும்.

 சுவையான அவலுக்கு, அவலில் சிறிதளவு இளம் சூடு பாலைத் தெளியுங்கள். பின்பு அவலில் தேங்காய்த் துருவல், சர்க்கரை ( சீனி) ஏலக்காய்த் தூள் போன்றவை கலந்தால் அதிக சுவை கிடைக்கும்.

 பிரியாணிக்காக இறைச்சியை வேக வைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே அதில் தயிர், இஞ்சி, பூண்டு, அரைத்து மசாலா கலந்து வைத்து விடுங்கள். நல்ல ருசி கிடைக்கும்.

 அடை சுடும்போது உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்த்தாலும் பருப்பை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் அடை ருசியாக இருக்கும்.

 காலிஃபிளவர் வேக வைக்கும் நீரில் இரண்டு தேக்கரண்டி பால் சேருங்கள். காலிஃப்ளவர் நல்ல நிறத்துடன் இருக்கும்.

 துவரம் பருப்பை வேக வைக்கும்போது தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போடுங்கள். பருப்பு விரைவில் வெந்துவிடும். வெண்ணெய்யைப் போல் குழைவாகவும் இருக்கும்.

 இட்லிக்குத் தேங்காய் சட்னி அரைக்கும்போது இரண்டோ மூன்றோ புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.