சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அனிமேஷன் அல்ல... நிஜம்!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் சிறிய ரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது உந்துவிசை தொழில்நுட்பத்தின் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:06 pm

எஸ். ராஜாராம்

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் சிறிய ரக ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்தது உந்துவிசை தொழில்நுட்பத்தின் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு டிரோனை (ஆளில்லா சிறியரக விமானம்) இயக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருக்கும். விரும்பும் உயரத்துக்கு அதை நீங்கள் இயக்க முடியும். ஆனால், இங்கிருந்து 18 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஒரு டிரோனை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்? ஏனெனில் உங்களது கட்டளைகள் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையவே 20 நிமிடங்கள் ஆகும். உங்கள் கட்டளையை ஏற்று அங்கு டிரோன் பறப்பது தொடர்பான புகைப்படம் உங்களுக்குக் கிடைத்தாலும், அது 20 நிமிடத்துக்கு முன்பு நிகழ்ந்ததாகத்தான் இருக்கும். எதுவும் தவறாக இருந்தால் அதை சரி செய்யக் கூட முடியாது. ஆனால், இந்தச் சாதனையைத்தான் நிகழ்த்திக் காட்டியுள்ளது நாசா குழு.

செவ்வாய் கிரகத்துக்கு பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் மணல் புயலைக் கிளப்பியபடி கடந்த ஏப். 19-ஆம் தேதி பறந்தது. தரையிலிருந்து 10 அடி உயரத்துக்கு மேலெழும்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் மொத்தம் 40 நொடிகள் பறந்து பின்னர் தரையிறங்கியது. அதன் நிழல் தரையில் விழுந்த புகைப்படத்தை ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா படம் பிடித்து அனுப்பியது. கருப்பு-வெள்ளை புகைப்படமாக இருந்தாலும் ஓர் அறிவியல் சகாப்தத்தின் அடையாளமாக அது திகழப் போகிறது. அதைத் தொடர்ந்து, பெர்சிவரன்ஸ் விண்கலத்தின் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, இன்ஜெனியூட்டி தரையிலிருந்து மெலெழும்பி பறந்து மீண்டும் தரையிறங்குவது வரை விடியோவாகவே பதிவு செய்து அனுப்பியது. ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை படம் எடுத்ததுபோலத்தான் இது. அனிமேஷன் படம்போலக் காட்சியளித்தாலும், இந்தச் செயல்பாடு உண்மையானது. அதைச் சாதித்துக் காட்டியுள்ளது நாசா. தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சாதனையாகத்தான் இதைக் கருத வேண்டும். பெர்சிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பவுள்ளது ஒரு விண்கலம். ஆச்சரியங்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.