தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விமானத்தை பறக்க வைக்கும் "புல்'

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.   விமானத்தை பறக்க வைக்கும் எரிபொருளாக அந்த புல் மாறும் நாள் வெகு

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 5:20 am

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.   விமானத்தை பறக்க வைக்கும் எரிபொருளாக அந்த புல் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
 ஆம். பெல்ஜியம் நாட்டின் கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வில் புதிய சாதனையை படைத்துள்ளனர். இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி வே செர்ன் கேர் கூறுகையில், ""தற்போது விலங்குகளுக்குத் தீவனமாக மட்டுமே புல் பயன்பட்டு வருகிறது. அந்தப் புல்லை பயோ எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் புல்வெளிகள் படர்ந்து உள்ளதால் எதிர்கால பயோ எரிசக்திக்கு உகந்ததாக புல் இருக்கும். இதற்காக புல்லுடன் பாக்டீரியாவை சேர்த்து லாக்டிக் ஆசிடாக மாற்ற வேண்டும். பின்னர் அதை பயோ எரிபொருளாகப் பயன்படுத்தலாம். அதையும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் மூலம் அதை விமான எரிபொருளாக மாற்றலாம். தற்போது புல்லில் இருந்து எடுக்கப்படும் சிறிய அளவு எரிபொருளுக்கு அதிகமாகச் செலவாகிறது. இதை வர்த்தகரீதியில் நாம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் செலவு குறையும். இதை வரும் ஆண்டுகளில் நாங்கள் செய்து காண்பித்து சாதனை படைப்போம்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வே செர்ன் கேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.