திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு!

மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும்.

News image
Updated On :17 மே 2026, 4:08 am IST

மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் இந்தப் பட்டாம் பூச்சிகள் மலைப்பிரதேசங்கள், பள்ளத்தாக்குகளில் பல்லுயிர்ப் பெருக்கங்களால் நிறைந்திருக்கும்.

நாட்டில் பல இடங்களில் பட்டாம் பூச்சிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவாவில் பலோலம், அகோண்டா கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கானது 'பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. இது கோவாவின் மறைக்கப்பட்ட ரத்தினம்தான்.

Story image

Zulkarnain

இந்தக் கடற்கரையை 'தேன்நிலவு கடற்கரை' என்றும் அழைப்பர். இந்த அமைப்பே பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட சிறிய குடாவில் உள்ளது. தரை வழியாகச் சென்றால் இதனை எளிதில் அடையலாம். காலையில் படகுச் சவாரி போனால், அதிர்ஷ்டம் இருந்தால் டால்பின்களைக் கண்டுகளிக்கலாம்.

அடர்ந்த வனத்தின் வழியே நடைப்பயணம் மேற்கொண்டால், மரங்களால் ஈர்க்கப்படும் பலவண்ணப் பட்டாம்பூச்சிகளைக் கண்டுகளிக்கலாம். மலை உச்சிப் பூக்களின் மீது பறக்கும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான பட்டாம் பூச்சிகளைக் காணலாம்.

அவை அழகோ அழகு. இங்குக் கடற்கரை நீர் தாழ் நிலையில் இருக்கும். இந்தச் சூழலில் இங்கு நண்டுகள், தங்கமீன்கள், நட்சத்திர மீன்கள், செம்மீன்கள், கடல்முள்ளெலிகள், ஆமைகள் போன்ற செழிப்பான நீர்வாழ் உயிரினங்களைக் காண சிறந்த இடம். இங்கு சூரிய அஸ்தமனம் தனிச் சிறப்பு. ஆனால், மாலை நேரத்துக்குள் திரும்பிவிடுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.