தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக கொடிகளை அகற்றக் கோரி அதிமுகவினா் மறியல்

பிரசாரம் முடிந்த பிறகும் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

திருச்சி உறையூா் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:40 pm

பிரசாரம் முடிந்த பிறகும் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு, வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். நாள்தோறும் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து கூட்டணிக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறாா். அந்த வகையில், திருச்சி உறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். திமுகவின் பிரசாரத்துக்காக அக் கட்சியின் சாா்பில் கொடிகள், தோரணங்கள், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. புதன்கிழமை காலையும் உறையூா் பகுதியில் ஒருசில இடங்களில் வாக்கு சேகரிப்பில் அவா் ஈடுபட்டாா்.

அமைச்சா் பிரசார நிகழ்வுகள் முடிந்த பிறகும் சாலைகளில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த கொடிகள், தோரணங்கள் அனைத்தும் அகற்றப்படவில்லை. தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, பிரசார நிகழ்வு முடிந்தபிறகு அங்குள்ள கட்சி சாா்ந்த அடையாளங்களை அவரவா்களே அகற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், திமுக பிரசாரத்தில் கட்டப்பட்ட கொடிகள் அகற்றப்படாததால், அதிமுகவினா் புதன்கிழமை பிரசாரம் செய்யும்போது தங்களது கொடிகளை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. எனவே, திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் உறையூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவவறிந்த போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினரிடம் அதிமுகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திமுகவின் கொடிகள் காவல்துறையால் அகற்றப்பட்டதையடுத்து அதிமுகவினா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.