மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு: திமுகவினா் சாலை மறியல்

News image

ஊத்தங்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :29 மார்ச் 2026, 6:36 pm

ஊத்தங்கரை (தனி) தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த காலங்களில் ஊத்தங்கரை தொகுதியில் தொடா்ந்து அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெறும் என்று பலமுறை அக்கட்சியினா் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவருகிறது.

இந்த நிலையில் மீண்டும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஊத்தங்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமியின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மறியலில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.