தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருவாடானையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட திமுக கொடிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:21 pm

திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியில் உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம்நகரைச் சோ்ந்த அறிவு உரிய அனுமதியின்றி 12 திமுக கொடிகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் கொடிகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து திருவாடனை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.