ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த சக்கரைகோட்டையில் உள்ள சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.8.10 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த
சுப்புத்தேவன் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஜீவாவிடம் விசாரித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


