திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகிழ்ச்சி!

சென்னை மெரினா  கடற்கரையின்  மணலில்  நடந்து கொண்டிருந்தார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.  அவரைப் பார்த்த  பிச்சைக்காரன்  அவரை நெருங்கி   கையை  நீட்டினான்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

முக்கிமலை நஞ்சன்

சென்னை மெரினா கடற்கரையின் மணலில் நடந்து கொண்டிருந்தார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவரைப் பார்த்த பிச்சைக்காரன் அவரை நெருங்கி கையை நீட்டினான். தன்னிடம் யாசிக்கிறான்என்பதைப் புரிந்து கொண்டவர் ஜிப்பா, சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தார். அவர் கையில் பணம் வைத்துக் கொள்வது இல்லை.

துண்டுத் துணியை மேலும் கீழும் ஊடுருவிப் பார்த்து உதறிக் கொண்ட பிச்சைக்காரணுக்கு பெரும் ஏமாற்றம்.

இந்தக் காட்சியைக் கண்ட ஒருவர் அவனிடம் வந்து கைக்குட்டையை வாங்கிப் பார்த்தார். ஆங்கிலத்தில் "ஜே' என்ற எழுத்து பின்னப்பட்டிருந்தது. மகிழ்ந்து போனவர் பத்து ரூபாய்த் தாளைத் தந்துவிட்டு கைக்குட்டையை எடுத்துக் கொண்டார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெருமையை அறிந்திருந்ததால் தனக்குக் கிடைத்த உயர்ந்த நினைவுப் பொருளாக எண்ணி மகிழ்ந்தார்.

அன்னிபெசண்ட் அம்மையாரால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ஜே.கே. பிரம்மஞான சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.