நோய் வரக் காரணமாகிறவற்றில் முறையற்று உண்பது முன் நிற்கும். உடலில் இயற்கை தந்துள்ள ஜீரண சக்தி எப்போதாவது ஏற்படும் உணவு முறைக் கேடுகளைத் தாங்கி அதனால் உடல் வருந்தாதவாறு பாதுகாக்கும். ஆனால் முறை தவறுவதையே பழக்கமாகக் கொண்டால் தீராத நோய்கள் ஏற்படும். "ஸர்வேபி ரோகா மந்தேக்நெü ஸýதராழுதராணிது' என்று ஆயுர்வேத சூத்திரம் எல்லா நோய்களும் ஜீரண சக்தி கேட்டால்தான் பெரும்பாலும் ஏற்படுபவை. ஆனால் குடல் வேக்காளம், குடலில் அடைப்பு, கல்லீரல், மண்ணீரல் பருத்துவிடுதல், வயிற்றில் நீர் வைத்தல், சிறுநீரகங்கள் கெடுதல் முதலியவை பசித்தீயின் மந்தத்தால் ஏற்படுபவையே என்பதே அந்த சூத்திரத்தின் பொருள். நோயற்ற ஆரோக்கியநிலையிலேயே ஜீரண சக்தி பற்றிய கவனம் தேவையென்றால், நீரிழிவுநோயுள்ள உங்களுக்கு, ஜீரண சக்தி பற்றி அதிகம் கவனிக்க வேண்டும் என்பது கூறமாலேயே விளங்குமல்லவா?