-தோள்பட்டையைக் கூடியவரை அசையாமல் வைத்திருந்து அதன் மேல் ஊறும்படி எண்ணெய்த் துணியைச் சுற்றி வைக்கவும். ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷ தைலம், தான்வந்திரம் குழம்பு, குக்குட மாம்ஸ தைலம் முதலியவை இதற்கான ஏற்ற தைலங்கள். இவற்றைத் தோள் பட்டையில் வலி மற்றும் சத்தம் வரும் பகுதியில் சதும்பத் தடவித் தடவி துணி சுற்றி 2-3 மணி நேரம் வைத்திருத்தல் நல்லது. அவசர நாட்களில் காலைக் குளியலுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைத் துணியில் பிழிந்து ஒத்தடம் கொடுக்கவும். அந்தத் தண்ணீரில் ஆமணக்கு இலை, நுணா இலை, முருங்கை இலை, புளிஇலை இவற்றில் கிடைத்தவற்றைப் போட்டு காய்ச்சிக் கொள்வது நல்லது.