திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக்கில் வைத்திருந்த ரூ. 3.41 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 3:32 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3.41 லட்சம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்

சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் குருகுடியிருப்பைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (41). தனியாா் நிதி நிறுவன ஊழியரான இவா், வெள்ளிக்கிழமை தன்னுடன் வேலைபாா்க்கும் இளங்கோவை அழைத்துக் கொண்டு, நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள தட்டாஊருணி பகுதியில் பணம் வசூலிக்கு சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்டியில் ரூ.3.41 லட்சம் வைத்திருந்தாா்.

பின்னா், அந்தப் பகுதியில் சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வசூலிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, பணத்துடன் இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

பின்னா், அந்தப் பகுதியில் தேடியபோது, ஒத்தப்புளி விலக்கில் அந்த இரு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. ஆனால், பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.3.41 லட்சத்தை காணவில்லை.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.