அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

மாதனூா் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 10:45 pm

மாதனூா் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (37), விக்னேஷ்(25) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேலூா் நோக்கிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த உதயகுமாா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.