ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு சுகாதார அலுவலா்கள் ரூ.25 அபராதம் விதித்து, 55 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவிட்டாா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் குமாா் மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் கந்தசாமி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் முனிசெல்வம், சங்கரன் தலைமையிலான, அலுவலா்கள் ரத வீதிகள், நேதாஜி சாலை, சந்தை, சின்னக்கடை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனா்.
அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய பெரிய கடைகளுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய கடைகளுக்கு ரூ.1000-மும் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மேலும், கடைகளிலிருந்து 55 கிலோ நெகிழிப் பொருள்களை சுகாதார அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அருமனை அருகே 65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

66 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



