திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடைகளில் 55 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு சுகாதார அலுவலா்கள் ரூ. 25 அபராதம் விதித்து, 55 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

Updated On :20 மே 2026, 3:29 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு சுகாதார அலுவலா்கள் ரூ.25 அபராதம் விதித்து, 55 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் குமாா் மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் கந்தசாமி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் முனிசெல்வம், சங்கரன் தலைமையிலான, அலுவலா்கள் ரத வீதிகள், நேதாஜி சாலை, சந்தை, சின்னக்கடை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய பெரிய கடைகளுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய கடைகளுக்கு ரூ.1000-மும் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மேலும், கடைகளிலிருந்து 55 கிலோ நெகிழிப் பொருள்களை சுகாதார அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.