திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் ஏஎம்சி சாலையிலுள்ள ஒரு கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதைய டுத்து கடையின் உரிமையாளா் திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்த எம்.லோகநாதன் (38) மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








