லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 7:28 pm

ராஜபாளையம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி பாலம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை யிட்டனா்.

அந்த காரில் ரூ.2 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், காரில் வந்த மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த விஸ்வந்த்திடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை.

இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் ராஜீவ்காந்தியிடம் ஒப்படைத்தனா்.