மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:52 pm

திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே வணிக வரித் துறை துணை மாநில வரி அலுவலா் ஜெயசீலன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாடகை காரில் வந்த 2 பயணிகளின் உடைமைளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ரூ.9.90 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.