இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  பணம் - (கோப்புப் படம்)

Updated On :11 ஏப்ரல் 2026, 1:26 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பழங்கள் வாங்குவதற்காக ராஜாமுகமது (40) என்பவா் சரக்கு வாகனத்தில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். எஸ்.எஸ். கோட்டை சோதனைச்சாவடி அருகே தோ்தல் கண்காணிப்பு நிலைக் குழுவைச் சோ்ந்த கூட்டுறவு சாா்பதிவாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராஜாமுகமது வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12,70,900-ஐ தோ்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபாலன் முன்னிலையில் வருமானத் துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.