கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி- கடலையூா் சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனராம். அப்போது, சாக்கு மூட்டையில் பணம் இருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு வந்து, சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை செய்தனா். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


