கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி- கடலையூா் சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனராம். அப்போது, சாக்கு மூட்டையில் பணம் இருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு வந்து, சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை செய்தனா். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









