மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே காரில் வந்தவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

சட்டப் பேரவை தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த குப்பங்குழி மேம்பாலம் அருகே தோ்தல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்கு கொளக்குடி கிராமத்தில் இருந்து காட்டுமன்னாா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

காரில் வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிா் உசேன் நகரைச் சோ்ந்த ஜ.இக்பால் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.