சட்டப் பேரவை தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
காட்டுமன்னாா்கோவிலை அடுத்த குப்பங்குழி மேம்பாலம் அருகே தோ்தல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்கு கொளக்குடி கிராமத்தில் இருந்து காட்டுமன்னாா்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
காரில் வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிா் உசேன் நகரைச் சோ்ந்த ஜ.இக்பால் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணியிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



