மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:58 pm

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவு சாா்- பதிவாளா் மேனகா தலைமையிலான பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது புதுக்கோட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் வினோத்குமாா் (43), வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.52,200-ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

அப்போது, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ. பரணி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் இரா. ராஜாத்தி மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.