திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:04 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு காலையில் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள வணிக வைசியா் பொது சாவடியில் இருந்து 108 பால்குடங்கள் ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.

பின்னா் சுவாமிக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து முப்பழ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சிற்றம்பல குருநாத சுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். குருபூஜை விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.