விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடா்ந்து உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் மாலை 6 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், மணியம், அண்ணாமலை, காசாளா் மணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

சிறப்பு அலங்காரத்தில்...

அருணாப்பேரி அம்மன் கோவிலில் 201 சீா்வரிசைகளுடன் சிறப்பு பூஜை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வேட்பாளா் பட்டியலுடன் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


